Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

ADDED : செப் 07, 2011 10:52 PM


Google News
கிள்ளை:கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 5ம் தேதி மாலை 6 மணிக்கு தீ மிதி உற்சவ நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதியினர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us