ADDED : ஜூலை 28, 2011 03:25 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி, மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி
சார்பில் ஜூலை 31 ல் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது முதல் பகல் இரண்டு மணி வரை நடக்கும் முகாமில்
கண்புறை, பார்வை மாற்றம், அறுவை சிகிச்சை செய்தல், லென்ஸ் பொருத்துதல்
போன்றவைகளுடன் இலவசமாக கண்ணாடி வழங்கப்படும். சோழவந்தான் கிளை மேலாளர்
கோவர்த்தனம், உதவி மேலாளர் முரளிதரன் ஏற்பாடு செய்துள்ளனர்.