Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/மர்மமான முறையில் லாரி டிரைவர் இறப்பு: பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு

மர்மமான முறையில் லாரி டிரைவர் இறப்பு: பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு

மர்மமான முறையில் லாரி டிரைவர் இறப்பு: பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு

மர்மமான முறையில் லாரி டிரைவர் இறப்பு: பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு

ADDED : ஆக 07, 2011 01:52 AM


Google News
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மர்மமான முறையில் இறந்த லாரி டிரைவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அடைக்கலம்(30).

இவரது மனைவி வெள்ளையம்மாள்(27). இவர்களுக்கு தமிழரசன்(3), தமிழரசி(1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான அடைக்கலம் தான் ஓட்டிவந்த லாரியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்துவந்த திருவேங்கைவாசலைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சின்னாத்தாள்(23) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இருவரும் நெருங்கி பழகியதால் சின்னாத்தாள் கர்ப்பிணியானார். இதையடுத்து அவரை அடைக்கலம் இரண்டாம் தாரமாக்கினார். இருவருடனும் குடும்பம் நடத்திவந்த நிலையில் முதல் மனைவி வெள்ளையம்மாளுடன் குடும்பம் நடத்துவதை தவிர்க்குமாறு அடைக்கலத்திடம் இரண்டாவது மனைவி சின்னாத்தாள் கூறியுள்ளார். அவர் மறுக்கவே இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு தனது இரண்டாவது மனைவி சின்னாத்தாள் வீட்டுக்குச் சென்ற அடைக்கலம் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி சின்னாத்தாளின் உறவினர்கள் இரவோடு இரவாக அவரை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப் ஆயினர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அடைக்கலம் இறந்தார். அவரது முதல் மனைவி வெள்ளையம்மாள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். பிரேத பரிசோதனை அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அடைக்கலத்தின் உடலை பார்த்து கதறிய அவர்கள் உடல் முழுவதும் காயம் இருப்பதால் அவரை இரண்டாவது மனைவி சின்னாத்தாளின் உறவினர்கள் அடித்து கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீஸார், குற்றச்சாட்டை புகார் மனுவாக எழுதி தருமாறு வேண்டினர். புகார் கொடுத்து ஆறுமணி நேரமாகியும் இதில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்யாததால் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடைக்கலத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்காரணமாக மருத்துவமனை வளாகம் நேற்று மாலை மூன்று மணி முதல் பெரும்பரபரப்புக்கு உள்ளானது. மர்மமான முறையில் இறந்த அடைக்கலம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும். கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானால் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என டவுன் டி.எஸ்.பி., கீதா உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us