/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமியர் தப்பியோட்டம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமியர் தப்பியோட்டம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமியர் தப்பியோட்டம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமியர் தப்பியோட்டம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமியர் தப்பியோட்டம்
ADDED : ஜூன் 01, 2024 02:11 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை நரிமேட்டில் அரசு குழந்தைகள் காப்பகம் இயங்குகிறது. சிறுமியர் மாயமான வழக்கில் மீட்கப்படும் போது, அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என வேறு யாருடனும் செல்ல விருப்பமில்லை என, தெரிவிக்கும் போது, காப்பகத்தில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 17 வயதுடைய மூன்று சிறுமியர் நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் பின்பக்க வழியாக, காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஒடி விட்டனர். இது குறித்து, அரசு குழந்தைகள் காப்பக சூப்பிரண்டு பரமேஸ்வரி என்பவர் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி சிறுமிகளை மீட்க, 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.