புதுச்சேரி : ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு லூயி கண்ணையா தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.
காங்., சார்பில் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி இருதய ஆண்டவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஒஸ்பீஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. குமரகுருபள்ளம் பகுதியில் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் என்.ஆர்., காங்., மாநில செயலாளர் லூயி கண் ணையா தலைமையில் விக்மர் விஜய்ராஜ், தமிழ்ச்செல்வம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.