அவலூர்பேட்டையில் ஷபே- பராத் தொழுகை
அவலூர்பேட்டையில் ஷபே- பராத் தொழுகை
அவலூர்பேட்டையில் ஷபே- பராத் தொழுகை
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை மசூதியில் ஷபே- பராத் சிறப்பு தொழுகை நடந்தது.அவலூர்பேட்டை மசூதியில் நேற்று முன்தினம் ஷபே- பராத்தை முன்னிட்டு இஷா தொழுகை இரவு 9 மணிக்கு நடந்தது.
ஹஸரத் முஸ்தகீம் பயான் செய்தார். நான்கு ரகாத் நபிலான தஸ்பீஹ் சிறப்புத்தொழுகை நடந்தது. பின்னர் நள்ளிரவில் முஸ்லிம்கள் மசூதியிலி ருந்து ஊர்வலமாக அடக்கஸ்தலத்திற்கு (ஈத்கா மைதானம்)சென்றனர். அங்கு யாசீன், தபாரக் சூராக்களை ஓதி இறந்தவர்களுக்காக பாவ மன்னிப்பும், சுவனம் புகுவதற்கான சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் செய்தனர். இந் நிகழ்ச்சியில் முத்தவல்லி ஹாஜிபாஷா மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.