ADDED : செப் 13, 2011 01:01 AM
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, நேற்று முன் தினம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வந்தார்.
அப்போது மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜனின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதுதொடர்பாக, தன்னையும், மாநில தலைவர் சுரேஷையும் மொபைல் போனில் கிருஷ்ணசாமி மிரட்டியதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மதுரை கூடல்புதூர் போலீசில் முருகவேல்ராஜன் புகார் செய்துள்ளார்.