குமாரபாளையம்: குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., இன்ஜினியரிங் கல்லூரியில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பியல் துறை சார்பில், மூன்று நாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். முதல்வர் சுப்ரமணியன் வரவேற்றார். சென்னை விர்டுசா அசோசியேட் டைரக்டர் சுரேஷ் ஸ்ரீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். கருத்தரங்கில், அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் செந்தில்குமார், ஜெகன் பிரதீப், ஜாகீர்உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.