சாராய உற்பத்திக்கு மட்டுமே "எத்தனால்' பயன்பாடு
சாராய உற்பத்திக்கு மட்டுமே "எத்தனால்' பயன்பாடு
சாராய உற்பத்திக்கு மட்டுமே "எத்தனால்' பயன்பாடு

சென்னை : ''கடந்த ஆட்சியில் சாராய உற்பத்திக்கு மட்டுமே, 'எத்தனால்' பயன்படுத்தப்பட்டது,'' என்று பா.ம.க., உறுப்பினர் தெரிவித்தார்.
அஸ்லாம் பாஷா - மனிதநேய மக்கள் கட்சி: முந்தைய தி.மு.க., ஆட்சியில், ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு ஆரம்பித்து, 10 நாட்களுக்கு பின்னரே அரிசி கிடைக்கும். ஆனால், நோன்பு துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே, அரிசி வழங்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முந்தைய ஆட்சியில் அரிசி சரியில்லாமல் இருந்தது.
அமைச்சர் செல்லூர் ராஜு: கூட்டுறவு கடைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. 4,239 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். முந்தைய ஆட்சியில் அரிசி சாப்பிட பயன்படுத்த முடியாத மாதிரி இருந்தது. ஆனால், தற்போது அரிசி, 'அம்மா' மாதிரி உள்ளது என்று கூறி, மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
மகாலிங்கம் - மார்க்சிஸ்ட்: ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட் மூலம் வழங்க வேண்டும். 500 கார்டுதாரர்களுக்கு ஒரு கடை வீதம் அமைக்க வேண்டும். கூட்டுறவு தேர்தலை முந்தைய அரசு நடத்தியதில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்யப்பட்டு, தனி அலுவலர்களது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி தேர்தல் கமிஷன் அமைத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் 20 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், அதிக எடையுள்ள மூட்டைகளை கையாள்வது கடினம். எனவே, அதிக எண்ணிக்கையில், எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
லிங்கமுத்து - இந்திய கம்யூ.,: ரேஷன் கார்டுகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது; குளறுபடிகளும் நடக்கின்றன. பழைய அட்டையைப் பிரித்து, புதிய குடும்ப அட்டை வாங்க முடிவதில்லை. புது அட்டை கோரி வரும் விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் கார்டுகள் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.