ADDED : ஜூலை 14, 2011 08:52 PM
புதுடில்லி : சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி விசாரணையில், மத்திய அரசு சார்பில் வக்கீலாக நியமிக்கப்பட்ட இவருக்கு பதிலாக, இந்த விசாரணையில் நாரிமன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.