/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண் தற்கொலை முயற்சி : கணவர் மீது போலீஸ் வழக்குபெண் தற்கொலை முயற்சி : கணவர் மீது போலீஸ் வழக்கு
பெண் தற்கொலை முயற்சி : கணவர் மீது போலீஸ் வழக்கு
பெண் தற்கொலை முயற்சி : கணவர் மீது போலீஸ் வழக்கு
பெண் தற்கொலை முயற்சி : கணவர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஜூலை 11, 2011 11:17 PM
திண்டிவனம் : இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனம் அடுத்த சாரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் சுதாகர் (24). அதே பகுதியை சேர்ந்தவர் ஹெலன் (19). இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது தனது தாய் இந்திரா வீட்டிற்கு சென்று ஹெலன் வசித்து வந்தார். தொடர்ந்து தனது மனைவி மீது சந்தேகமடைந்து சுதாகர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி ரோட்டில் நடந்து சென்று ஹெலனை அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த ஹெலன் வீட்டிற்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பலத்த காயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் சுதாகர் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.