ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : கவிஞர் புதுவை சிவம் நினைவு நாள், அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம், அரசு கொறடா நேரு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க., செயலாளர்அனந்தராமன், ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.