Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாகர்கோவில் மாணவியர்மதுரையில் மீட்பு

நாகர்கோவில் மாணவியர்மதுரையில் மீட்பு

நாகர்கோவில் மாணவியர்மதுரையில் மீட்பு

நாகர்கோவில் மாணவியர்மதுரையில் மீட்பு

ADDED : ஆக 27, 2011 11:58 PM


Google News
நாகர்கோவில்:நாகர்கோவிலில் காணாமல் போன மாணவியர், மதுரையில் மீட்கப்பட்டனர்.

நாகர்கோவில் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் நால்வர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாததால், அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில், நான்கு மாணவியரும், பள்ளிச் சீருடையுடன் மதுரை பஸ்சில் சென்ற விவரம் தெரிந்து, மதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த, நான்கு மாணவியரையும் போலீசார் மீட்டு, தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் போலீசார், மாணவியரின் உறவினர்களுடன் சென்று, அவர்களை மீட்டு வந்தனர். ஆசிரியை திட்டியதால் நான்கு பேரும், வீட்டுக்கு செல்லாமல் மதுரை சென்றதாக தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us