Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
குறள் விளக்கம் :

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.


சாலமன் பாப்பையா : இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us