Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் எதிரொலி: 3வது நாளாக விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி

ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் எதிரொலி: 3வது நாளாக விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி

ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் எதிரொலி: 3வது நாளாக விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி

ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் எதிரொலி: 3வது நாளாக விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி

ADDED : செப் 22, 2025 04:15 PM


Google News
Latest Tamil News
லண்டன்: பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் 3வது நாளாக இன்றும் (செப்டம்பர் 22) விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை 'காலின்ஸ் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனின் லண்டனில் உள்ள ஹீத்ரோ, பெர்லினின் பிரஸ்ஸல்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான நிலையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பயணியர் விமானநிலையத்தை கடந்து உள்ளே அனுப்பப்படும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்பாடு, வருகை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர்.

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படவிருந்த 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us