இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும்: டிரம்புக்கு ரஷ்யா சுளீர்
இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும்: டிரம்புக்கு ரஷ்யா சுளீர்
இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும்: டிரம்புக்கு ரஷ்யா சுளீர்
ADDED : செப் 15, 2025 07:51 AM

மாஸ்கோ: இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும் என அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது. இதனால், நம் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் உண்டாக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்தியா- ரஷ்யா இடையே உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். இந்தியாவுக்கு, ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது. நீண்டகால ரஷ்யா-இந்தியா நட்பு கலாசாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றியுள்ளது.
தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.