Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நேபாளம் புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவியேற்பு

நேபாளம் புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவியேற்பு

நேபாளம் புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவியேற்பு

நேபாளம் புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவியேற்பு

ADDED : ஜூலை 14, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
காத்மாண்டு: நேபாளத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசண்டா அரசு தோல்வியடைந்ததையடுத்து புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டிய பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக, 2022ம் ஆண்டு டிச., 25ல் பதவியேற்றார். இக்கூட்டணி அரசு மீது கடந்த மார்ச் 15-ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஒட்டெடுப்பு இன்று (12.07.2024) நடைபெற்றது. இதில் மொத்தம் 275 உறுப்பினர்களில் பிரசண்டாவுக்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசண்டா தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. பிரதமர் பதவியிலிருந்து பிரசண்டா விலகினார்.

இதையடுத்து நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சர்மா ஒலி பிரதமராக நாளை (ஜூலை 15) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்மா ஒலி ஏற்கனவே 2020ம் ஆண்டு பிரதமராக இருந்தார். சொந்த கட்சியில் ஏற்பட்ட மோதலால் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us