மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..

11 பிரிவுகளின் கீழ்
தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின், 11 பிரிவுகளின் கீழ், ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
குற்றச்சாட்டுகள் என்னென்ன?
பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அத்துமீறி நுழைதல், சட்ட விரோதமாக தடுத்தல், வலுக்கட்டாயமாக கடத்துதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் தொல்லை, விருப்பத்துக்கு மாறாக ஆபாச புகைப்படங்களை காண்பித்தல், தாக்குதல்-, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தல், ஆதாரங்களை அழித்தல், தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், ஞானசேகரன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பாராட்டு
ஐந்தே மாதத்தில் வழங்கப்பட்டுள்ள, இந்த தீர்ப்பு, நீதித்துறை மீதான நம்பிக்கையை, பெண்கள் இடையே அதிகரித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், வெகுவாக குறையும் என்ற எண்ணமும் உருவாகி உள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை, சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை, பொது மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட, அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகள்.