Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

ADDED : பிப் 28, 2025 02:56 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''தன் முன்னோர்களைப் போலவே தமிழகத்தை காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார்,'' என ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியின்படி வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் கமலுக்கு வாய்ப்பு அளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக கமல் தயாராகி வருகிறார். அவரை தி.மு.க., முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், நாளை பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கமல் வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர், தி.மு.க., தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழகத்தைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!. இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us