Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்று 12, நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 12, நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 12, நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 12, நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

UPDATED : ஜூன் 10, 2025 02:54 PMADDED : ஜூன் 10, 2025 02:53 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கும், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (ஜூன் 10) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (ஜூன் 11) ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்திற்கு வரும் ஜூன் 14,15ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us