Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே': ஐகோர்ட் கிளை கருத்து

‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே': ஐகோர்ட் கிளை கருத்து

‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே': ஐகோர்ட் கிளை கருத்து

‛தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே': ஐகோர்ட் கிளை கருத்து

ADDED : ஜூலை 18, 2024 01:06 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: ‛‛ தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களை மீட்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள 26 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்களை விடுவித்து தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

பிறகு நீதிபதி கூறியதாவது: தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. பிரச்னை வேறொரு நாட்டோடு தொடர்பு உடையது. மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us