Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

UPDATED : ஜூலை 18, 2024 01:03 PMADDED : ஜூலை 18, 2024 12:49 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவள்ளூர்: ‛‛ தனித்து நின்றாலும், வெற்றி பெறும் வலிமையுடன் உள்ளோம்'', என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திருவள்ளூர் நகர காங்., செயற்குழு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று காங்கிரஸ் தற்போது இல்லை. அனைத்து இடங்களிலும் வலிமையாக உள்ளது. தனியாக நின்றாலும் வெற்றி பெறும் அளவுக்கு நமது கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 2021 சட்டசபை தேர்தலின் போதும், 2024 லோக்சபா தேர்தலின் போதும் எங்களுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை தரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனபடுத்துகிறார்கள்.

மரியாதை எங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். அனைத்து நகர, வட்டார, மாவட்ட தலைவர்களும், எங்களுக்கு உரிய அங்கீகாரம் எப்போது கிடைக்கும். கடந்த 2 , 3 தேர்தலில் அது சரியாக இல்லை என்கின்றனர். நாம் வலிமையாக இருந்தால், நமக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். அதற்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தான் கூறினேன். தற்போது 9 தொகுதிகள் கொடுக்கின்றனர். ஓட்டு வங்கி அதிகரிக்கும் போது 20 தொகுதிகள் கொடுக்கிறோம் என கூட்டணி கட்சியை சொல்ல வைக்கும் அளவுக்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்பது விதி. தொண்டர்களை நாங்கள் உற்சாகபடுத்தாமல் வேறு யார் செய்ய முடியும். சித்தாந்தம், கொள்கை கோட்பாடு உள்ள கட்சி காங்கிரஸ் தான். பா.ஜ.,விடம் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us