Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம், துாய்மை பணி

ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம், துாய்மை பணி

ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம், துாய்மை பணி

ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம், துாய்மை பணி

ADDED : ஜன 17, 2024 08:15 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நேற்று வந்த தமிழக கவர்னர் ரவியை, கலெக்டர் விஷ்ணு சந்திரன் வரவேற்றார். வேட்டி, சட்டை அணிந்து கவர்னர் தன் மனைவி லட்சுமியுடன் காலை 10:30 மணிக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தர்ப்ப சயனராமர், சந்தான கோபால கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர் சன்னிதிகளில் கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோசாலையில் இருந்த பசுக்களுக்கு அகத்திக் கீரையை கவர்னர், அவரது மனைவியும் வழங்கினர்.

அங்கிருந்து காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு கவர்னர் வந்தார்; சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்றார்.

மதியம் 12:20 மணிக்கு துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கோவில் கிழக்கு ரதவீதியில் கவர்னர், தன் மனைவியுடன் துாய்மை பணி செய்தார். அதன் பிறகு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டு, ராமநாதபுரத்தில் ஓய்வு எடுத்து, மதியம் 2:50 மணிக்கு காரில் மதுரை சென்றார்.

15 பேர் கைது


------------திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு கவர்னர் நேற்று சென்ற போது கருப்புக்கொடி காட்ட முயன்ற நாகேசுவரன், பாவெல், ஆதி தமிழர் கட்சி மண்டல செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us