பாக்., அணு ஆயுத கட்டளை மையம் அழிப்பு: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் சாதனை!
பாக்., அணு ஆயுத கட்டளை மையம் அழிப்பு: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் சாதனை!
பாக்., அணு ஆயுத கட்டளை மையம் அழிப்பு: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் சாதனை!

ஒரே நாளில் தாக்குதல்
ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தியாகராஜன் பேசியதாவது: இந்தியாவில் வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது. மறக்கப்பட்டு இருக்கிறது. கார்கில் போரின்போது, இந்திய ராணுவம் எல்லை தாண்டாமல், பாகிஸ்தானை விரட்டியது. மும்பையில் 5 முறை பயங்கரவாத தாக்குதல் நடந்த போதும் எந்த பதிலடியும் கொடுக்கப்படவில்லை. 2014 முதல் பிரதமர் மோடி இந்தியாவிற்கு புதிய வரலாற்றை படைக்கிறார். அவர் வரும் போது ராணுவம் மோசமான நிலையில் இருந்தது. ராணுவத்தை மேம்படுத்தி புதிய ஆயுதங்களை வழங்கினார். உரியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினோம். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு இந்திய வீரர்கள் கூட கொல்லப்படவில்லை.
டெர்ரர் பஸ்டர்
பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் பேசுகையில், ஆப்பரேஷன் சிந்தூரை தனிமைபடுத்தப்பட்ட நிகழ்வாக பார்க்க முடியாது. நாட்டின் வரலாற்றை புரிந்து கொண்டு பார்க்கும் போது தான் வெற்றியை புரிந்து கொள்ள முடியும். ஆப்பரேஷன் சிந்தூர் கொடுத்த முதல் வெற்றி, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவை விமர்சிக்கிற அரசியல் சக்திகளை, ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவுக்கு ஆதரவாக, ராணுவத்துக்கு ஆதரவாக, மோடிக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது. இதில் ராகுல் மட்டுமே விதிவிலக்கு.