கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா
கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா
கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா

பாதியில் பதவி விலகல்
கல்பனா இரண்டு ஆண்டுகள், 4 மாதங்கள் மேயராக பதவி வகித்திருக்கிறார். தி.மு.க.,வை சேர்ந்த முதல் பெண் மேயரான இவர், ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகிக்காமல், இடைப்பட்ட காலத்திலேயே பதவி விலகி உள்ளார்.
நெல்லை மேயரும் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயர் சரணவனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை கமிஷனரிடம் கொடுத்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னணி
தி.மு.க, மேயர் சரவணன் மீது, பல்வேறு புகார்களை, ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், கட்சி தலைமைக்கு தெரிவித்தனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர, 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினர். நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது, கடந்த ஜனவரியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவும், திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இணைந்து, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.