அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவு
அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவு
அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவு
UPDATED : ஜூலை 19, 2024 02:43 PM
ADDED : ஜூலை 19, 2024 01:02 PM

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
எளிய மக்களுக்கு மலிவான உணவு வழங்கிடும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. இன்று (ஜூலை 19) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி; புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.