Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

ADDED : மார் 14, 2025 12:47 PM


Google News
Latest Tamil News
சிவகங்கை: 'மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்தாவது மத்திய அரசிற்கு வெட்கம் வந்து நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன்' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: மாநில அரசு மத்திய அரசின் கல்வி கொள்கைக்காக நிதி ஒதுக்கியதை தான் வரவேற்கிறேன். மாநில அரசு நிதி ஒதுக்கியதை பார்த்து வெட்கம் வந்தாவது மத்திய அரசு நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் லட்சினை மாற்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, 'அந்த குறீயீடு என்பதை பயன்படுத்துவதாக இருந்தால் பயன்படுத்தலாம் அதனை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. அந்த குறியீடு என்பது முக்கியமல்ல.

அதற்கு பின்னாள் வரும் எண்களே முக்கியம். அதில் ஆயிரம் ஒதுக்குகிறார்களா? அல்லது 0 ஒதுக்குகிறார்களா? என பார்க்க வேண்டும்' என ப.சிதம்பரம் பதில் அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us