குளறுபடி இன்றி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., ஆதரவு
குளறுபடி இன்றி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., ஆதரவு
குளறுபடி இன்றி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., ஆதரவு
ADDED : ஜூன் 26, 2024 03:27 PM

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பா.ஜ., ஆதரித்துள்ளது. மேலும், மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் பா.ஜ., தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பா.ஜ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளது. விவாதத்தின்போது பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டம் 208(3) அ-வின்படி மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என முதல்வர் கூறியுள்ளர்.
பீஹாரில் மாநில அரசு நடத்திய இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் தடை செய்ய காரணம், அங்கு கணக்கெடுப்பில் குளறுபடி, தவறு இருந்தது தான். 2012ல் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மாநில அரசுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார். முதல்வரின் தீர்மானத்தை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால் மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.