அவதூறு வழக்கு: ஜூலை 2ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கு: ஜூலை 2ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கு: ஜூலை 2ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2024 03:48 PM

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 2ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். பா.ஜ., வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 20ம் தேதி, ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு இன்று(ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.