Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அங்கித்திவாரிக்கு,2வது முறையாக ஜாமின் கோரி மனு

அங்கித்திவாரிக்கு,2வது முறையாக ஜாமின் கோரி மனு

அங்கித்திவாரிக்கு,2வது முறையாக ஜாமின் கோரி மனு

அங்கித்திவாரிக்கு,2வது முறையாக ஜாமின் கோரி மனு

ADDED : ஜன 30, 2024 10:54 PM


Google News
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு,2வது முறையாக ஜாமின் கோரி திண்டுக்கல்

நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு பிப்.1ல் விசாரணைக்கு வருகிறது.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை,சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக

கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி,ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி டிச.1ல் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது 4வது

முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு பிப்.7 வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே அங்கித்திவாரி,கைது செய்யப்பட்ட போது அவரது தரப்பு வழக்கறிஞர் செல்வம் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்

நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மீண்டும் வழக்கறிஞர் செல்வம்,2வது முறையாக அங்கித்திவாரிக்கு ஜாமின் வழங்க கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று 2வது முறையாக மனு தாக்கல் செய்தார். இம்மனு பிப்.1ல் விசாரணைக்கு வருகிறது.

வழக்கறிஞர் செல்வம் கூறியதாவது: அங்கித்திவாரி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us