Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

UPDATED : மே 21, 2025 09:30 PMADDED : மே 21, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
தஞ்சை: தஞ்சை அருகே வேனும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சையின் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழக்க பலி 5 ஆக அதிகரித்தது. மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us