Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

ADDED : ஜூலை 02, 2025 04:39 AM


Google News
திருச்சி, விரகாலுாரைச் சேர்ந்த ஸ்டெனிஸ்லாஸ் லுார்துசாமி எனும் ஸ்டேன்சாமி, பாதிரியாராக இருந்து ஜார்க்கண்டில் ஒரு அமைப்பை நிறுவி வெளிநாட்டு நிதி பெற்றார்.

புனே அருகேயுள்ள பீமா கரோகானில் பொதுக்கூட்ட கலவரத்தில், ஸ்டேன்சாமி உள்ளிட்ட எட்டு பேர் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டனர். ஸ்டேன்சாமி சிறையில் இருக்கும்போது கொரோனாவால் மரணம் அடைந்தார்.

ஸ்டேன்சாமியின் பூர்வீக கிராமமான விரகாலுாரில், கத்தோலிக்க சர்ச்சில் உருவச்சிலை, நினைவிடம் அமைத்து, 5ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியை படுகொலை செய்ய திட்டம் தீட்டியது, அவரது இ-மெயில் வாயிலாக, தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்தது.

பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டியவருக்கு உருவச்சிலை, நினைவிடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது, கடும் கண்டனத்துக்கு உரியது; அதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், எதிராக போராட்டம் நடத்தப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us