தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்: ராமதாஸ்
தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்: ராமதாஸ்
தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்: ராமதாஸ்
UPDATED : ஜூலை 21, 2024 10:16 AM
ADDED : ஜூலை 21, 2024 05:40 AM

திண்டிவனம்: 'இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான போராட்டத்தை நடத்தினால் தான், இந்த அரசு பணியும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
வன்னியர்களுக்கு 20 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் துவங்கிய போதே, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகிறோம்.
ஏற்கனவே இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டேன். ஆனால், நிறைவேற்றவில்லை.
இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற, ஏற்கனவே ஏழு நாட்கள் சாலை மறியல் நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம். அதே மாதிரியான போராட்டத்தை நடத்தினால் தான், தமிழக அரசு பணியும் என்றால், விரைவில் அது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.