Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற அ.தி.மு.க., பிரமுகர் கைது

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற அ.தி.மு.க., பிரமுகர் கைது

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற அ.தி.மு.க., பிரமுகர் கைது

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற அ.தி.மு.க., பிரமுகர் கைது

ADDED : ஜூலை 21, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கடந்த 4ம் தேதி படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைபோலீசார் அன்று இரவு மேலப்பிடாகை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, தொடர்ந்து வரிசையாக வந்த இனோவா, பென்ஸ் மற்றும் சுமோ ஆகிய மூன்று கார்களில் 10 சாக்கு மூட்டைகளில், ரூ.8 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், திருப்பூர் மணிராஜ்,36; மணல்மேடு குடி கவுதமன்,36; திருக்கோவிலூர் தட்சிணாமூர்த்தி,41; சிவமூர்த்தி,38, ஆகிய 4 பேரும் ஒடிசா மாநிலம் தாரி கொண்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வேதாரண்யம், கடல் பகுதியில் காத்திருக்கும் நபர்களிடம் கொடுத்து விட்டு செல்ல இருந்ததும், அதன்பிறகு அவர்களது கூட்டாளிகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்புடைய உள்ளூர் நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், கஞ்சா கடத்தலில் தொடர்புடைய வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவரான கோடியக்காடு கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் அறிவழகன்,60; என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us