Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார்': மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் சாடல்

'சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார்': மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் சாடல்

'சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார்': மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் சாடல்

'சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார்': மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் சாடல்

ADDED : ஜூன் 19, 2024 04:00 AM


Google News
திண்டுக்கல் : “சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் செயல்படுகின்றனர்,” என, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் கூறியதாவது:

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீதும், நிர்வாகிகள் மீதும் போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும்போதே கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக விரோதிகளுக்குத் தான் போலீசார் பாதுகாப்பாக இருந்தனர்.

போலீஸ் துறையில் இருப்பவர்களே ஜாதிய உணர்வோடு செயல்பட்டால் சட்டம் - ஒழுங்கை எப்படி பாதுகாக்க முடியும். ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை சட்ட சபையில் நிறைவேற்ற வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அ.தி.மு.க.,விற்கு இல்லை. பழனிசாமி முழு கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us