காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் என தாய் புகார்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் என தாய் புகார்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் என தாய் புகார்
ADDED : ஜூன் 04, 2024 01:40 AM

சிதம்பரம்: கரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் நிவேதிதா, 25; சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பொறியியல் கல்லுாரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் படித்தபோது, அதே கல்லுாரியில் படித்த சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், 30, என்பவரை காதலித்தார்.
இவர்கள் திருமணத்திற்கு நிவேதிதா தாய் கமலம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி, 2022ல் சுபாஷ்சந்திரபோசை, நிவேதிதா திருமணம் செய்தார். பள்ளிப்படையில் உள்ள சுபாஷ்சந்திரபோஸ் வீட்டில் குடும்பம் நடத்தினர்.
இருவரும், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில், வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது, நிவேதிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிவேதிதா இறந்தது குறித்து, கரூரில் உள்ள அவரது தாய்க்கு கூட தகவல் தெரிவிக்காமல் கணவர் வீட்டில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மகள் இறப்பு குறித்து தகவலறிந்த கமலம், சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்து உள்ளார்.
என் மகள் சாவில் மர்மம் உள்ளது. மகளை கொடுமைபடுத்தியதால் அவர் இறந்துள்ளார். முழுமையாக விசாரித்து, இறப்பிற்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என, புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நிவேதிதா எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் சிக்கியது. அதில், 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அவசரப்பட்டு காதல் திருமணம் செய்து விட்டேன்.
இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். என் காதல், என் அம்மா, அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. அவர்களை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன். என் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.