Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

UPDATED : ஜூன் 26, 2024 05:23 PMADDED : ஜூன் 26, 2024 12:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: ‛‛பார்லிமென்டில் பதவி ஏற்கும்போது ‛‛ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க'' என கோஷமிட்ட தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்'' என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பார்லிமென்டில் பதவியேற்கும் போது, ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கோஷங்களை எழுப்பி தமிழக எம்.பி.,க்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அண்ணாமலை கூறியதாவது: திமுக எம்பிக்கள் கொத்தடிமைகள். நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம். திமுக தவறு செய்யும் போது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும். மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசம் அடைந்து விட்டது. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

4 கட்சி மாறியவருக்கு இது தெரியாது

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்திருந்தார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ''சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பங்கு என்ன என்பது காங்.,க்கு எப்படி தெரியும்? நேரு மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என வரலாறு எழுதி வைத்துள்ளது காங்., 4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரசின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us