Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான "ஆரஞ்ச் அலர்ட்": 6 மாவட்டங்களில் மழை கொட்டுமாம்!

நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான "ஆரஞ்ச் அலர்ட்": 6 மாவட்டங்களில் மழை கொட்டுமாம்!

நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான "ஆரஞ்ச் அலர்ட்": 6 மாவட்டங்களில் மழை கொட்டுமாம்!

நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான "ஆரஞ்ச் அலர்ட்": 6 மாவட்டங்களில் மழை கொட்டுமாம்!

ADDED : ஜூன் 26, 2024 01:14 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: நீலகிரி, கோவையில் இன்று (ஜூன் 26) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரியில் நாளை (ஜூன் 27) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னாள் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் இன்று சூறாவளிக்காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us