Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் அன்புமணி கண்டனம்

எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் அன்புமணி கண்டனம்

எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் அன்புமணி கண்டனம்

எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் அன்புமணி கண்டனம்

ADDED : மார் 13, 2025 11:09 PM


Google News
சென்னை:பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில், 4.5 கோடி ரூபாயில் புதிய பள்ளி கட்டும் பணி நேற்று துவங்கியது. அதை பார்வையிட சென்ற, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருளை, தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். எம்.எல்.ஏ.,வை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம், பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஒரு எம்.எல்.ஏ.,வை, அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் துவக்க விழாவில், கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது பாசிசம். தி.மு.க.,வினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அருளை தாக்கியவர்கள் மீது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us