ADDED : செப் 04, 2025 03:52 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா காலேஜ் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் உலகத் தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
வறுமையை போக்கவும், தென்னை பயிரின் மகத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற பசிபிக் தேங்காய் அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ம் தேதி தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர் சந்தோஷ் தேங்காயின் மகத்துவம், தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் பற்றி விளக்கினார். மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உதவி பேராசிரியர் சார்லஸ் டார்வின் நன்றி கூறினார்.