Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 4 மாதத்தில் சேகரித்த பழைய உணவு எண்ணெய்...: ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பயன்பாடு

4 மாதத்தில் சேகரித்த பழைய உணவு எண்ணெய்...: ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பயன்பாடு

4 மாதத்தில் சேகரித்த பழைய உணவு எண்ணெய்...: ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பயன்பாடு

4 மாதத்தில் சேகரித்த பழைய உணவு எண்ணெய்...: ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பயன்பாடு

ADDED : செப் 04, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
உணவு பாதுகாப்புத்துறையினரின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் உணவு எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது என்றும், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை ருக்கோ என்ற அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ருக்கோ தனியார் அமைப்பு 1 கிலோ பழைய எண்ணெய் ரூ.30க்கு வாங்கி வட இந்தியாவில் நடக்கும் பயோ டீசல் உற்பத்திக்கு அனுப்பி வருகிறது.

மாவட்டம் முழுவதும் மாதந்தோறும் 250 முதல் 300 கிலோ வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் பழைய எண்ணெய் பெறப்பட்டு வருகிறது.

2025ல் ஏப்.1 முதல் ஆக.31 வரை நான்கு மாதங்களில் 45.9 டன் வரை பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை காட்டிலும் சேகரிக்கப்பட்ட எண்ணெய் அளவு அதிகரித்து வருகிறது.

250க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் ஒப்படைத்து வருகின்றன. இருப்பினும் நகர்ப்புற கடைகளில் பரபரப்பாக இயங்கும் சில கடைகளில் லாப நோக்கிற்காக தராமல் கல்தா கொடுக்கின்றனர். மீண்டும் வடை போட பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: பழைய எண்ணெய்யை மீண்டும் உணவுக்கு பயன்படுத்தவே கூடாது. மீறி பயன்படுத்தும் போது கெட்ட கொழுப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பழைய எண்ணெய்யை ஒப்படைக்காமல் மீண்டும் பயன்படுத்துவோருக்கு நோட்டீஸ் வழங்கப்படும், மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் வழக்கு போடப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us