ADDED : ஜன 12, 2024 12:35 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 13 பேர், கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா, பரத நாட்டிய உலக சாதனை கூட்டமைப்பு சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
சங்கரன்கோவிலில் நடந்த தென் மாவட்ட அளவிலான வில் வித்தை போட்டியில் 11 மாணவர்கள் முதலிடம்,10 மாணவர்கள் இரண்டாமிடம், 9 மாணவர்கள் மூன்றாமிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பரிசு பெற்றனர்.
மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பத்மா, பரதநாட்டிய ஆசிரியர் சக்தி ஆகியோரையும் பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி பாராட்டினர்.