Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

ADDED : மார் 23, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி : வணிக வளாக பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுவது, ஒன்றிய அலுவலக ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் அவதி என காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. தற்போது சேதம் அடைந்து பெரும்பாலான கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. அப்பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாகவும், மது பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் மக்கள் நடமாட முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. மது குடிப்பவர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதால் அக்கம் பக்கத்தினர் முகம் சுளிக்கின்றனர்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. ஒன்றிய அலுவலக ரோட்டில் ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உழவர் சந்தை அலுவலர்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பயனாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்வர். ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவித்து வருவதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. முக்கு ரோட்டில் ரவுண்டானா இல்லாததால் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுப்பாடு வேண்டும்


ராமலிங்கம், தனியார் ஊழியர்: வணிக வளாக கடைகள் உள்ள பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் நடமாட முடியவில்லை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கின்றனர். மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பால் அவதி


பாலமுருகன், தனியார் ஊழியர்: ஒன்றிய அலுவலக ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம், உழவர் சந்தை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், ஒன்றிய அலுவலகம் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி அதிகாரிகளின் வாகனங்கள் சென்று வரும். ரோட்டை ஆக்கிரமித்து சுருங்கி இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.

ரவுண்டானா அவசியம்


சீனிவாசன், விவசாயி: ரவுண்டானா இல்லாததால் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகனங்களை ஒழுங்குபடுத்தி முறையான வழியில் சென்று வர ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விபத்தை தடுக்க ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us