ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், 575 பேருக்கு ரூ. 1.76 கோடி மதிப்பிலான பட்டாக்களை வழங்கி பேசினார். சப் கலெக்டர் பிரேம்குமார், நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், ஒன்றிய குழு தலைவர்கள் ஆறுமுகம், சிந்து முருகன், அதிகாரிகள் பங்கேற்றனர்.