/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் சேதம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமம் இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் சேதம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமம்
இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் சேதம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமம்
இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் சேதம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமம்
இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் சேதம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமம்
ADDED : ஜூன் 15, 2025 05:41 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை இரவார்பட்டி - அச்சங்குளம் இடையே வைப்பாற்றில் கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் 20 ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் இரவார் பட்டி, அச்சங்குளம், கோட்டைப்பட்டி, சூரார்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அதிக அளவில் பட்டாசு ஆலைகள் விவசாய நிலங்கள் உள்ளன. இவர்களின் போக்குவரத்திற்காக இரவார் பட்டி அச்சங்குளம் இடையே 20 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியே 10 கி.மீ., துாரத்தில் ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை செல்ல முடியும்.
கட்டப்பட்ட ஓராண்டிலேயே தரைப்பாலம் முழுமையாக சேதம் அடைந்து விட்டது. இதனால் டூவீலர் உட்பட எந்த வாகனங்களும் சென்று வர முடியவில்லை. ஆற்றை கடந்து நடந்து மட்டுமே செல்ல முடியும். இதை தொடர்ந்து இப்பகுதியினர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 20 கி.மீ., சுற்றியே ஏழாயிரம்பண்ணை, சாத்துார் வெம்பக்கோட்டைக்கு செல்ல முடிகிறது. எனவே இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.