ADDED : மார் 23, 2025 06:39 AM
சாத்துார் : சாத்துாரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி தடுப்பணை, கன்னிகா மதகு கால்வாய், வைப்பாறு வடிநிலப் பகுதி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
எழுத்தாளர் லட்சுமண பெருமாள் வாழ்த்தினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.