Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லிப்டில் தவறி விழுந்து சிறுவன் பலி

லிப்டில் தவறி விழுந்து சிறுவன் பலி

லிப்டில் தவறி விழுந்து சிறுவன் பலி

லிப்டில் தவறி விழுந்து சிறுவன் பலி

ADDED : மே 30, 2025 01:28 AM


Google News
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத்தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பாதுஷா.

இவரது மனைவி ரம்ஜான்பிவி. இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர்களது மகன் முகமது ஆசிப் 12. இவர் தன் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சித்தியுடன் பராசக்தி காலனி சிறுகுளம் கண்மாய்கரை ரோட்டில் உள்ள அச்சகத்திற்கு சென்றார். அங்கு இருந்த லிப்டில் முகமது ஆசிப் ஏறி இறங்கி விளையாடிய போது தவறி கீழே விழுந்து இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us