Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வார்டு விசிட்

வார்டு விசிட்

வார்டு விசிட்

வார்டு விசிட்

ADDED : ஜூலை 10, 2024 06:53 AM


Google News
வத்திராயிருப்பு, : வ.புதுப்பட்டி பேரூராட்சி 3வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் வாறுகால் சுவர்கள், சுகாதார வளாகம் இன்றி அவதி, கொசு தொல்லை உட்பட பல்வேறு குறைகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

பசும்பொன் தெரு, நடுப்பட்டி தெரு, செக்கடி தெரு மேற்கு ஆகிய பகுதிகளை கொண்ட இந்த வார்டில் தடுப்பு சுவர் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. தார் ரோடு உயர்ந்து, வாறுகால்கள் தாழ்ந்து காணப்படுகிறது.

தினசரி வாறுகால் துப்புரவு செய்யப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கொசு தொல்லை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

ஆண், பெண் இருபாலருக்கும் சுகாதார வளாக வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.

போர்வெல் தண்ணீர் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தாலும், தாமிரபரணி தண்ணீர் பல நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது.

எனவே, சுகாதார வளாகம் அமைத்து தருதல், வாறுகால் தடுப்பு சுவரை உயர்த்தி கட்டுதல், தினசரி தூய்மை பணி, தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

தேவை சுகாதார வளாகம்


ஜெயபிரகாஷ் குடியிருப்பாளர்: பசும்பொன் தெரு மேற்கு பகுதியில் சர்ச் பாதைதைக்கு செல்லும் காலி இடத்தை தான் மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆண், பெண் இருபாலருக்கும் நவீன சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.

-வாறுகால்களை சரிசெய்ய வேண்டும்


-கோமதி, குடியிருப்பாளர்: பசும்பொன் நகரில தார் ரோடு உயரமாகவும், கழிவுநீர் வாறுகால்கள் தாழ்வாகவும் காணப்படுகிறது. கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால்கள் உயர்த்தி கட்டவும், அடிக்கடி தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை


-சுதா, துணைத் தலைவர்: மேல தெருவில் சுகாதார வளாகம் கட்டுதல், பசும்பொன் தெருவில் வாறுகால் கட்டுதல் கூடுதல் மின் விளக்குகள் அமைத்தல் தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சியில் தெரிவித்துள்ளேன். இதில் பசும்பொன் தெரு நடுப்பட்டி தெருக்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேல தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்


-சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: நவீன சுகாதார வளாகம் கட்டவும், சேதமடைந்த வாறுகால்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு உறுப்பினர் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் புகார்கள் சரி செய்யப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us