ADDED : ஜூலை 10, 2024 06:54 AM

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறையினர் இடித்தனர்
இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிவிட்டது.
அதனடிப்படையில் நேற்று காலை 11:00 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி துவங்கியது. வத்திராயிருப்பு வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டது.