Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்

வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்

வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்

வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 12, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா வ.புதுபட்டி பேரூராட்சி 1வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் வாறுகால், குறுகிய ரோட்டால் விபத்து அபாயம், அரசு பஸ் இன்றி அவதி, தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு சிரமங்களுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

உடையார்பட்டி, கிறிஸ்டியன் பேட்டை அணைக்கரைப்பட்டி ஆகிய மூன்று பகுதிகளை கொண்து இந்த வார்டு. புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் மெயின் ரோடு நன்றாக இருந்தாலும், உடையார்பட்டி நுழைவுப் பகுதியில் உள்ள தார் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் வாறுகால் கட்டமைப்பு சிதைந்து காணப்படுகிறது.

பாரஸ்ட் ஆபீஸில் இருந்து கிறிஸ்டியன் பேட்டை வழியாக வத்திராயிருப்பு செல்லும் தார் ரோடு போதிய அகலம் இன்றி குறுகலாக இருப்பதால் எதிரும், புதிருமாக கனரக வாகனங்கள் வந்தால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. கிறிஸ்டியன் பேட்டையில் தார் ரோடு உயர்ந்தும், மண் ரோடு ஒரு அடி ஆழத்திற்கு பள்ளமாகவும் காணப்படுவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

அணைக்கரைப்பட்டி மெயின் ரோடு புதிதாக போடப்பட்டுள்ள நிலையில் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அர்ஜுனா ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியை சேர்ந்த இந்த வார்டில் மூன்று பகுதிகளிலும் அவ்வப்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

இத்தகைய அடிப்படை வசதி குறைபாடுகளை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது அப்போது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வேண்டும் பஸ் வசதி

அணைக்கரைப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் நிலையிலும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் வரும் நிலையிலும் போதிய பஸ் வசதி இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மினி பஸ் கூட விலக்கு ரோடு வழியாகத்தான் வருகிறது. எனவே, அரசு பஸ் இயக்கப்பட வேண்டும். இருபுறமும் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

- -பூப்பாண்டி, குடியிருப்பாளர்.

பேரூராட்சியில் கோரிக்கை

அணைக்கரைப்பட்டி ரோடு சீரமைத்தல், உடையார் பாலத்தில் ரோடு , பாலம் சீமைத்தல், மயானம் சீரமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், கூடுதல் தண்ணீர் வசதி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். . இதில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- -சொர்ணரத்தினம், வார்டு உறுப்பினர்.

குறைகள் சரி செய்யப்படும்

பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்த அணைக்கரைப்பட்டி ரோடு போடப்பட்டுள்ளது. மயானம் மற்றும் மயானம் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.

உடையார்பட்டி ரோடு, வாறுகால் சீரமைக்கப்படும் வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து குறைகள் சரி செய்யப்படும்.

- -சுப்புலட்சுமி, தலைவர்.

வத்திராயிருப்பு, ஜூன் 12-

வத்திராயிருப்பு தாலுகா வ.புதுபட்டி பேரூராட்சி 1வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் வாறுகால், குறுகிய ரோட்டால் விபத்து அபாயம், அரசு பஸ் இன்றி அவதி, தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு சிரமங்களுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

உடையார்பட்டி, கிறிஸ்டியன் பேட்டை அணைக்கரைப்பட்டி ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது இந்த வார்டு.

புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் மெயின் ரோடு நன்றாக இருந்தாலும், உடையார்பட்டி நுழைவுப் பகுதியில் உள்ள தார் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் வாறுகால் கட்டமைப்பு சிதைந்து காணப்படுகிறது.

பாரஸ்ட் ஆபீஸில் இருந்து கிறிஸ்டியன் பேட்டை வழியாக வத்திராயிருப்பு செல்லும் தார் ரோடு போதிய அகலம் இன்றி குறுகலாக இருப்பதால் எதிரும், புதிருமாக கனரக வாகனங்கள் வந்தால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.

கிறிஸ்டியன் பேட்டையில் தார் ரோடு உயர்ந்தும், மண் ரோடு ஒரு அடி ஆழத்திற்கு பள்ளமாகவும் காணப்படுவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

அணைக்கரைப்பட்டி மெயின் ரோடு புதிதாக போடப்பட்டுள்ள நிலையில் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அர்ஜுனா ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியை சேர்ந்த இந்த வார்டில் மூன்று பகுதிகளிலும் அவ்வப்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

இத்தகைய அடிப்படை வசதி குறைபாடுகளை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது அப்போது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வேண்டும் பஸ் வசதி


பூப்பாண்டி, குடியிருப்பாளர்: அணைக்கரைப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் நிலையிலும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் வரும் நிலையிலும் போதிய பஸ் வசதி இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மினி பஸ் கூட விலக்கு ரோடு வழியாகத்தான் வருகிறது. எனவே, அரசு பஸ் இயக்கப்பட வேண்டும். இருபுறமும் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை


சொர்ணரத்தினம், வார்டு உறுப்பினர்: அணைக்கரைப்பட்டி ரோடு சீரமைத்தல், உடையார் பாலத்தில் ரோடு, பாலம் சீமைத்தல், மயானம் சீரமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், கூடுதல் தண்ணீர் வசதி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

இதில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறைகள் சரி செய்யப்படும்


சுப்புலட்சுமி, தலைவர்: பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்த அணைக்கரைப்பட்டி ரோடு போடப்பட்டுள்ளது. மயானம் மற்றும் மயானம் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.

உடையார்பட்டி ரோடு, வாறுகால் சீரமைக்கப்படும் வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து குறைகள் சரி செய்யப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us